2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல்

மாந்தைமேற்கு பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்குரிய கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று மாந்தைமேற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு. அந்தோனிமுத்து டென்சில் பெர்னாந்து அவர்களின் தலைமையில் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. பொது நிர்வாக சுற்றறிக்கை 25/2023 இற்கு அமைவாக இந்த நிகழ்வானது மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார், அதனைத்தொடர்ந்து மாந்தைமேற்கு பிரதேச சபையின் அனைத்து உத்தியோகத்தர்களும் அரச சேவை உறுதியுரையேற்று சத்தியப் பிரமாணம் செய்தனர்.
அத்துடன் செயலாளரினால் தற்போதைய சவால்கள் வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அவற்றை அடைவதற்குரிய அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்க உரை ஆற்றப்பட்டது